காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி 9 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
குறிப்பாக கட்டட புனரமைப்பு மற்றும் மாணவர்களுக்கான மலசல கூடங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த காங்கேசன்துறையில் ஒரு தொகுதி காணிகளை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுவித்திருந்தார்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியும் விடுவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட பாடசாலையில் உள்ள சிறிய வளங்களைக் கொண்டு மீண்டும் தனது சொந்த இடத்தில் குறித்த பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
போதிய வளங்கள் முழுமையாக இல்லாத நிலையிலும் இயங்கிவரும் குறித்த பாடசாலைக்காக புனரமைப்பு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடமாகாண கல்வலி அமைச்சினால் குறித்த பாடசாலையில் மலசல கூடடம் அமைப்பதற்காக 6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் மீள்குடியேற்ற அமைச்சினால் குறித்த பாடசாலையில் உள்ள 2 மாடிக் கட்டிடங்களை புனரமைப்பதற்கு 3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்விரு பணிகளும் மிக விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது என்று காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment