முல்லைத்தீவில் திடீர் என எரிந்த காடு பல ஏக்கர் எரிந்து நாசம் !

முல்லைத்தீவு வசந்திபுரம் கிராமத்து பின்புறமாக உள்ள காட்டில் திடீர் என பரவிய தீயினால் சுமார் இருபது ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது
 பிற்பகல் ஒருமணியளவில் முருகண்டி கோவிலுக்கு முன்புறமாகவும் வசந்திபுரம் கிராமத்து பின்புறமாகவும் உள்ள காட்டில் திடீர் என தீ பரவியுள்ளது குறித்த பிரதேசத்தினை அண்மித்ததாக இருக்கின்ற இரண்டு இராணுவ முகாமில் காவல்கடமையில் இருந்தவர்களால் அவதானிக்கப்பட்டதனை அடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற இராணுவத்தினர் உழவு இயந்திரங்கள் மற்றும் இராணுவ நீர்த்தாங்கி வாகனங்களின் துணையோடு சுமார் இரண்டு மணி நேரத்துக்குள் தீ மக்கள் குடியிருப்பினுள் செல்லாதவாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment