திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நீதிமன்ற வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் 01 மணியளவில் வெள்ளை நிற வேன் ஒன்று அவ் வீதியினூடாக பயணித்த நிலையில் அதற்க்குள் ஒருவர் கத்துவதை அவதானித்த பொலிஸார் வேனை நிறுத்தியுள்ளனர்.
அவ்வேளை வேனின் சாரதி நிறுத்தாமல் செல்ல முற்பட்டபோது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அத்துப்பாக்கி பிரயோகத்தில் மட்டக்களப்பு பகுதியைச்சேர்ந்த திலீப் குமார் (25 வயது)இ மற்றும் திருகோணமலை.திருஞானசம்பந்தர் வீதியைச்சேர்ந்த துரைநாயகம் சுதர்ஷன் (34 வயது) இஆகிய இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேனையும் அதில் பயணித்த மற்றுமொருவரையும் துறைமுக பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Blogger Comment