‘சமுத்ரா பெஹெரிதார்’ கப்பலை இலங்கை கடற்படைத் தளபதி பார்வையிட்டார்.

இலங்கை கடற்­ப­டை­த் த­ள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­திர விஜ­ய­கு­ண­ரத்ன நேற்­று ­முன்­தினம் இந்­தி­யாவின் கரை­யோர பாது­காப்புப் படைக்குச் சொந்­தமான ‘சமுத்ரா பெஹெ­ரிதார்” கப்­பலை பார்­வை­யிட்டார்.
இதன்­போது இலங்கைக் கடற்­படைத் தள­ப­தியை இக் ­கப்­பலின் கட்­டளை அதி­காரி கெப்டன் டீ.ஆர்.சர்மா வர­வேற்­ற­துடன் கடற்­படை மரி­யா­தையும் வழங்­கப்­பட்­டது.
அதன்­பின்னர் கப்­பலில் சிறிய பய­ணத்தை மேற்­கொண்­ட­துடன் இரு­த­ரப்பு கலந்­து­ரை­யா­டல்­களும் இடம்­பெற்­றன.
ரியர் அட்­மிரல் தர்­மேந்­திர வத்­தேவ, மேற்கு கடற்­பி­ராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான கட்­டளை தள­பதி ரியர் அட்­மிரல் ஜயந்த டி சில்வா ஆகி­யோ­ருடன் இலங்கை கடற்­படை தலை­மை­யகம் மற்றும் கரை­யோர பாது­காப்புத் திணைக்­க­ளத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சிரேஷ்ட கடற்­படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதன்போது நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment