ஜனாதிபதி என்னை ஏமாற்றிவிட்டார்! காணாமல்போன மாணவியின் தாய் கதறல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார விளம்பரம் ஒன்றில் காணாமல் போன எனது மகள் உள்ளிட்ட இன்னும் நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
அவர்களும் காணாமல் போயுள்ளனர். அவர்களது பெற்றோர்களும் பல இடங்களில் பிள்ளைகளைத் தேடித் திரிகின்றனர்.
ஜனாதிபதியைச் சந்தித்து நான் எனது மகள் தொடர்பான தகவல்களைக் கூறிய சந்தர்ப்பத்தில் ஒரு மாதத்திற்குள் தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
ஆனால் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என வவுனியாவைச் சேர்ந்த ஜெயவனிதா என்ற தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
மருதானையில் அமைந்துள்ள சீ.எஸ்.ஆர். நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment