இம்முறை 2016ஆம் ஆண்டு கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்து கிழக்கு மாகாணத்திற்கு வெளியே நியமனம் பெற்ற மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று முற்பகல் கொழும்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து கலந்துரையாடிய கிழக்கு மாகாண முதலமைச்சர், கல்வியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளின் மாணவர்களின் பிரச்சினை குறித்து பிரதமருக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்
இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கல்நதுரையாடி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்
அத்துடன் கடந்த 2013ஆம் ஆண்டு கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் 1134 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் காணப்பட்டது.
அதற்காக 1573 பேர் கிழக்கு மாகாணத்தில் இருந்து விண்ணப்பித்திருந்த போதிலும் 390 பட்டதாரி ஆசிரியர்கள் மாத்திரமே நியமிக்கப்படவிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பிலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துரைத்திருந்தார்
மீதமான 744 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்குவது தொடர்பிலும் பிரதமர் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பார் என முதலமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
கல்வியல் கல்லூரிகளில் கற்கையை பூர்த்தி செய்த கிழக்கு மாகாண ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பில் பல போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Blogger Comment